அலாதியாய்
அநாதியாய்
அமைதியாய்
அடக்கி
அடங்கிவிடும்.
ஆசையாய்
ஆணவமாய்
ஆர்ப்பரிக்கும்
ஆதரிக்கும்
ஆட்டிவைக்கும்.
கருணை
கம்பீரம்
கலகம்
குரூரம்
கயமை
காதல்
மொழிவன
பாசம்
பகட்டு
பொய்
புகழ்
பாவம்
பகை
பாராட்டுவன
வன்மம்
வசீகரம்
வக்கிரம்
வாத்சல்யம்
வருத்தம்.
நிரம்பியன.
மெய்மை
மயக்கம்
மகிழ்வு
மதிப்பு
மனபிறழ்வு
மரணமும்
தரவல்லது
சொற்கள்.........
பிரயோகமாகும்
தருணம்
தக்க பதிலை
தேடி தொலைத்து
விடுகிறேன்
என் சொற்களாலான
என்னை.