3/28/2012

                                       வலை
       
           அன்பு, காதல்
           பாசம்  கருணை
          அநேக வலைகள்
          ஆக்கிரமிக்க .......


           இரை' யொன்றே
           எல்லாவற்றுக்கும்
           குறி..........

           உறவாய் துணை
           துணையாய்  இதம்;
           இதமாய் ; கஞ்சி!

           இரைதரல் ,
           இரையாதல்'  தான்
            தியாகம்
           சொல்கிறார்கள்-------

           நான்,  உன்னை
           நீ , என்னை   
           வளைக்கத்தான்
           வேண்டுமெனில்
           நல்ல  எதிரிகளாகவே
           நாம்  இருப்போம்.

          நட்பேனும்
          பாழாகதிருக்குமே!  
                
          
         

3 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

நட்பு...மனதைப் பகிர்ந்துகொள்ள இரை கொடுப்பதும் இரையை வாங்கிக்கொள்வதும் இரைமீட்டலுக்கு நல்லதொரு உறவின் கைக்கோல் !

நிலாமகள் சொன்னது…

ந‌ட்பை காத‌லை அன்பை க‌ருணையை இரைப்போம் அவ‌ர‌வ‌ர் முற்ற‌த்தில்... இரைக்க‌ச் சுர‌க்கும் ஊற்ற‌ல்ல‌வா இவையெல்லாம்...!ப‌சிய‌ட‌ங்க‌ இரையாத‌லும் இரை கொள்ள‌லும் இதில‌ட‌ங்கா.

G.T.MURUGAN சொன்னது…

(mannikkavum angila eluthugalal thamlil yeluthugiren)oru maano alla puliyo dhinamum oodathan vendiirukkirathu oru velai unavirko alla vuir valvatharko.ingu pinathai thinbatho alla pidithu kondru thinbatho than nammai nimirntho kunintho valavaikkirathu

                        மௌன  குறு வாளின்                          குதர்க்கம்                          குறுக்கறுத்து                     ...