வறுமை
வலி
வேதனையை
விழுங்கிச்
செரித்தோம்
வாழ்வு
களிப்புற..............
அவரவர்
அபிலாஷைகளில்
அநாதியாய்
அலைந்துழன்றோம்
பிராயங்களில்
சண்டைப் போட்ட
மரப்பாச்சி
--- இன்று
ஆளுக்கொன்று
வாங்கிட
வகையிருந்தும்
வசமாகுதில்லை